UPDATE: உணவு நஞ்சானமை காரணமாக 325 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Date:

காலி, கொக்கல பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் உணவு விஷமானதால் 325 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை ஊழியர்கள் நேற்று (19) உண்ட உணவில் விஷம் கலந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இக்குழுவினருக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதிகள் வைத்தியசாலையில் உள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

முதல் இணைப்பு

காலி – கொக்கலயில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உணவு விஷம் காரணமாக கராப்பிட்டியவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், அருகிலுள்ள வைத்தியசாலைகளிலும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை வாந்தி, கடுமையான தலைவலி, வயிற்றுப்போக்கு என ஊழியர்கள் புகார் தெரிவித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த தொழிற்சாலையில் நேற்று உணவு சாப்பிட்டு வந்த ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...