எரிபொருள் விலையேற்றம்: நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

Date:

எரிபொருள் வழங்கக் கோரியும், எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராகவும் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய காலி, மாத்தறை, கம்பளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, சிலாபம், ஹிங்குராங்கொட, திகன, மத்துகம, அவிசாவளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

எரிபொருள் கோரி போராட்டம் காரணமாக சிலாபம் – கொழும்பு வீதி காக்கப்பள்ளி மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அதேவேளை எரிபொருளை கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மலையக ரயில் பாதை ரபுக்கன பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது.

மேலும், கண்டியில் இருந்து கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தனியார் பேருந்துகள் இயங்காமல் உள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று நள்ளிரவு முதல் ஆமுலுக்கு வரும் வகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

அதன்படி 92 ஒக்டோன் பெற்றோல் 84ரூபாவினாலும் 95 ஒக்டோன் பெற்றோல் 90 ரூபாவினாலும் ஓடோ டீசல் 113 ரூபாவினாலும் சூப்பர் டீசல் 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்காரணமாகவே மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...