கல்வி அமைச்சின் அறிவிப்பு!

Date:

நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் உள்ள மாணவர்ளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மின்துண்டிப்பு காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் இன்று முதல் பாடசாலை விடுமுறையை வழங்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கல்வி அமைச்சிடம் முன்னதாக கோரியிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, வடக்கு, வடமேல் கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் தவணைப் பரீட்சை நிறைவடைந்துள்ளமையால் 6 முதல் 13 வரையான தரங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

இதன்படி மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் தவணைப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை மாத்திரம் பாடசாலைக்கு அழைக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

ஏனைய மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வாரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்காக மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்களாயின் அதற்கான அனுமதியை மாகாண கல்வி பணிப்பாளர் ஊடாக அதிபர்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பணிக்குழாமினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.

இன்று முதல் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...