இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் கொழும்பு காலி முகத்திடலில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
காலி முகத்திடலில் போராட்டங்களை நடத்தி வரும் இளைஞர், யுவதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.
7வது நாளாக தொடரும் தன்னெழுச்சி போராட்டத்தில், இன்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.