‘நாடு முழுவதும் போராட்டங்களால் அமைதியற்ற நிலைமை’:இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பிரஜைகளிடம் அமெரிக்கா ஆலோசனை

Date:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அமைதியின்மைக்கு மத்தியில் அமெரிக்கா தனது பயண ஆலோசனையில் தனது நாட்டு மக்களை இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மருந்துப் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவின் புதிய ஆலோசனையில் பயங்கரவாத அச்சுறுத்தல்களும் கவலையளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் 19, எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு காரணமாக இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் பயங்கரவாதம் காரணமாக இலங்கையில் அதிக எச்சரிக்கையுடன் செயற்படுங்கள்’ எனவும் வெளியுறவுத்துறை தனது சமீபத்திய பயண ஆலோசனையில் கூறியுள்ளது.

மேலும் ‘இலங்கையில் பொருளாதார நிலைமை மற்றும் எரிவாயு நிலையங்கள், கடைகள் மற்றும் சில மருந்தகங்களில் வரிசைகள் குறித்து எதிர்ப்புகள் உள்ளன. நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று, பெரும்பாலும் அமைதியற்ற நிலைமை காணப்படுகின்றது.

சில சந்தர்ப்பங்களில், போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம், மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்,’ நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுகளை குறிப்பிட்டு, அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுரை விடுத்துள்ளது.

மேலும், ‘நாடு முழுவதும் தினசரி திட்டமிடப்பட்ட மின் தடைகள் மற்றும் சில திட்டமிடப்படாத மின் தடைகள் உள்ளன, ஜெனரேட்டர்களுக்கான எரிபொருள் பற்றாக்குறையாக உள்ளது.

சில சந்தர்ப்பங்களில் பொது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அல்லது குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமை குறித்த அறிவிப்புகளுக்கு பயணிகள் உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்க வேண்டும்.

‘பயங்கரவாதிகள் சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரசு வசதிகள், ஹோட்டல்கள், கிளப்புகள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், முக்கிய விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை குறிவைத்து சிறிய அல்லது எச்சரிக்கை இல்லாமல் தாக்குதல் நடத்தலாம் எனவும் அமெரிக்க பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொவிட்-19 காரணமாக இலங்கைக்கான பயண சுகாதார அறிவிப்பையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

நாட்டில் அதிக அளவு கொரோனா வைரஸ் பதிவுகள் இருப்பதாலும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை நீங்கள் முழுமையாகப் பெற்றிருந்தால், உங்கள் கொவிட்-19 தொற்று மற்றும் கடுமையான அறிகுறிகளை உருவாக்கும் அபாயம் குறைவாக இருக்கலாம்.

எந்தவொரு சர்வதேச பயணத்தையும் திட்டமிடும் முன், தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடாத பயணிகளுக்கான குறிப்பிட்ட பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்யவும்,’ என்று பயண ஆலோசனையில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...