நுகேகொடை-மஹரகம வீதி மீண்டும் திறப்பு: விபரங்களை வெளியிட்ட பொலிஸார்!

Date:

நுகேகொடை- மஹரகம பிரதான வீதி (119) வழமையான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நுகேகொடை-மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 44 ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட ஐந்து பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், பொலிஸ் பஸ், பொலிஸ் ஜீப் வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.

மேலும், இந்த சம்பவத்தில் 05 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...