‘பாரதியின் தமிழ் மகன்’ விருது பெற்றார் அறிவிப்பாளர் அப்துல் ஹமீத்!!

Date:

உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத்துக்கு ‘பாரதியின் தமிழ் மகன்’ எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற மாபெரும் கலை நிகழ்ச்சியில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வழியில் பயணித்து தமிழ் மொழியின் பெருமையினை உலகெங்கும் ஓங்கி ஒலிக்கச்செய்யும் தமிழ் பணியினை கௌரவித்து பி.எச். அப்துல் ஹமீத்துக்கு, பாரதியின் தமிழ் மகன் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ் விருதினை இலங்கையின் முன்னணி தமிழ் ஊடக நிறுவனங்களும், முன்னணி தமிழ் வர்த்தக நிறுவனங்களும் இணைந்து வழங்கியுள்ளன.

இதன்போது, தென்னிந்திய விஜய் தொலைக்காட்சி புகழ் பாடகர்களான மூக்குத்தி முருகன், முத்துச்சிற்பி, மானசி, பரத் மற்றும் இலங்கையின் பிரபல ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான நவநீதன் ஆகியோரும், முன்னணி தொழிலதிபர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

பாரதியின் தமிழ் மகன் விருதினை தனது கரங்களில் ஏந்திக்கொண்ட அப்துல் ஹமீத் இதுபோன்றதொரு விருது இதற்கு முன் பெற்றதில்லை என்று குறிப்பிட்டமை, இவ்விருதுக்கே பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...