புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க தயாராக உள்ளது!

Date:

புதிய அமைச்சரவை இன்று (18) காலை 10.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவையில் சுமார் 20 பேர் அங்கம் வகிக்கவுள்ளதாகவும் சுமார் 10 முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் ஏனையவர்கள் இளம் எம்.பி.க்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்களான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அலி சபேர், பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கு மேலதிகமாக முன்னாள் அமைச்சர்களான டொக்டர் ரமேஷ் பத்திரன, டக்ளஸ் தேவானந்தா, திலும் அமுனுகம ஆகியோர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

அரசாங்கத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட அமைச்சரவை கடந்த 3ஆம் திகதி இராஜினாமா செய்தது.

ஆனால் அடுத்த நாள், பாராளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் வழமையான பணிகளை மேற்கொள்வதற்கு மூன்று அமைச்சர்களை மட்டுமே ஜனாதிபதி நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...