போராட்டக் களமாக மாறியுள்ள காலி முகத்திடல் : 3ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

Date:

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி நாட்டிற்காக வீதியில் இறங்கியவர்கள் தற்போதைய அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றும் முயற்சியாக கொழும்பு காலி முகத்திடலில் போராட்டக் களமாக மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதற்காக நாடு முழுவதிலுமிருந்து மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

ஏப்ரல் மாதம் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மும்முரமாக தயாராகி வந்த மக்கள், இம்முறை வித்தியாசமான களத்திற்கு தமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டுள்ளார்கள்.

தற்போதைய நெருக்கடியால், இம்முறை புத்தாண்டு உணவுகளின் நறுமணத்தை சுவாசிப்பது கனவாகிவிட்டது.
நாட்டு அரசாங்கம் வெளியேறும் வரை நாமும் செல்ல மாட்டோம் என்ற நோக்கத்தில் தற்போது காலி முகத்திடல் வழமைக்கு மாறாக காட்சியளிக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர முடிவு செய்துள்ளோம்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக காலி முகத்திடலில் 3ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது.

ஜனாதிபதி பதவி விலகும் வரை வெளியேற மறுத்து காலி முகத்திடலில் கூடாரங்கள் அமைத்து பல ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியுள்ளனர்.

Popular

More like this
Related

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...