மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!

Date:

ரம்புக்கனை வன்முறை தொடர்பில் பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உறுதியளித்துள்ளார்.

அதேநேரம், வன்முறைகளில் இருந்து விலகியிருக்குமாறு அனைத்து பொதுமக்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்றும், ரம்புக்கன சம்பவம் குறித்து பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை பொலிஸார் மேற்கொள்ளும் என்றும், அதனால் தான் மிகவும் வருத்தமடைந்ததாகவும் கூறியுள்ளார்.

‘அனைத்து பிரஜைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது வன்முறையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன், என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...