ரம்புக்கனை சம்பவம்: பாராளுமன்றம் ஆரம்பமாகி 5 நிமிடங்களில் ஒத்திவைப்பு!

Date:

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிதுமளியால் 10 நிமிடங்களுக்கு சபை நடவடிக்கைகளை சபாநாயகர் மனிந்த யாப்பா அபேவர்த்தன ஒத்திவைத்தார்.

இன்று காலை பாராளுமன்றம் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், நேற்று ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சபையின் அடிப்படை பணிகளை முன்னெடுக்க இடமளிக்குமாறு சபாநாயகர் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார். இவ்வேளையில் சபையில் அமளி துமளி ஏற்பட்ட நிலையில், சபை நடவடிக்கைகளை சபாநாயகர் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...