வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு வரையறை கட்டணம்: பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவிப்பு!

Date:

இன்று முதல் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை வரையறுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று நண்பகல் ஒரு மணி முதல் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளுக்காக 1000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிக்காக 1500 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

அத்துடன் கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களுக்கு அதிகபட்சமாக 5000 ரூபாவிற்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

எனினும், பஸ், லொறி மற்றும் வணிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் வரையறை கிடையாது என பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...