வாகன விபத்தில் 43 வயதுடையவர் உயிரிழப்பு!

Date:

நிட்டம்புவ கிரிந்திவௌ பாதையில் உனககதெனிய பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 43 வயதுடைய முஹம்மத் சபீக் என்பவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மீது பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த நிலையில், வந்துகொண்டிருந்த பஸ்சில் மோதியுள்ளது.

இதில், முஹம்மத் சபீக் வீதியில் விழுந்து பஸ்சின் சக்கரத்திற்குள் சிக்குண்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள்ளார்.

03 பிள்ளைகளின் தந்தையாகிய இவர் நிட்டம்புவ, ககட்டோவிட்ட பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...