வாகன விபத்தில் 43 வயதுடையவர் உயிரிழப்பு!

Date:

நிட்டம்புவ கிரிந்திவௌ பாதையில் உனககதெனிய பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 43 வயதுடைய முஹம்மத் சபீக் என்பவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மீது பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த நிலையில், வந்துகொண்டிருந்த பஸ்சில் மோதியுள்ளது.

இதில், முஹம்மத் சபீக் வீதியில் விழுந்து பஸ்சின் சக்கரத்திற்குள் சிக்குண்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள்ளார்.

03 பிள்ளைகளின் தந்தையாகிய இவர் நிட்டம்புவ, ககட்டோவிட்ட பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...