ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரிப்பதற்காக பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக கோப் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளது.
21 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கோப் குழுவின் முன் விசாரணைக்கு அழைக்கப்படும் என கோப் குழுவின் தலைவர் கடந்த 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.