‘சிம்மாசன உரை’ : கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன்

Date:

(சமகால அரசியல் களநிலவரம் தொடர்பில் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் முகப்புத்தகத்தில் பதிவிட்ட கவிதை தொகுப்பு)

சிம்மாசன உரை

சிங்கம் குகையிலிருந்து
நேற்று
வெளியே வந்தது

அதன் கண்களில்
ஒரு முயலின் தவிப்புத் தெரிந்தது

அசைவுகளில்
ஓர் ஆட்டுக் குட்டியின்
பயமிருந்தது

ஓநாய்க் குட்டிகளுக்கும்
சிறப்புத் தேவையுடைய நரிகளுக்கும்
சுரத்தற்ற குரலில்
அது உபன்னியாசம் வழங்கிற்று

அப்பாவிப் பிராணிகள்
அவதிப்படுவதையிட்டு
தளுதளுத்த குரலில்
கவலை வெளியிட்டது

அவற்றின் நலன் காக்குமாறு
ஓநாய்களிடமும்
நரிகளிடமும்
பரிந்துரை செய்தது

காடு பற்றி எரிவது பற்றியோ
பறவைகள்
அவலக் குரல் எழுப்பி
அலைமோதுவது பற்றியோ
எதுவும் சொல்லாமல்
யாரும் அறிநதிராத தனது குகைக்குள்
மீண்டும் புகுந்து கொண்டது

நேற்று நள்ளிரவில்
மற்றொரு காட்டுக்குத்
தீயிடப்பட்டது

வெக்கை பொறுக்க முடியாத
பிராணிகளதும் பறவைகளதும்
அவலக் குரல்
ஆகாயம் வரை ஒலித்தது…!

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...