நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி இழந்தார்!

Date:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தோல்வியடைந்ததையடுத்து அவர் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரேரணையை கொண்டு வந்ததையடுத்து நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர், துணை சபாநாயகர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர்.

இருப்பினும் எதிர்க்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதில் இம்ரான்கானுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வி அடைந்தார்.

உடனடியாக பாராளுமன்ற வளாகத்தை விட்டு இம்ராகன்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர்.

இந்நிலையில், இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தை விட்டு இம்ரான்கான் வெளியேறினார்.

பாகிஸ்தானின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக அந்நாட்டு நாடாளுமன்றம் திங்கட்கிழமை கூடுகிறது. அடுத்த தேர்தல் நடைபெறவுள்ள அக்டோபர் 2023 வரை அந்த நபர் ஆட்சியில் இருக்க முடியும்.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ராகன் கான் ஆவார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...