நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி இழந்தார்!

Date:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தோல்வியடைந்ததையடுத்து அவர் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரேரணையை கொண்டு வந்ததையடுத்து நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர், துணை சபாநாயகர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர்.

இருப்பினும் எதிர்க்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதில் இம்ரான்கானுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வி அடைந்தார்.

உடனடியாக பாராளுமன்ற வளாகத்தை விட்டு இம்ராகன்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர்.

இந்நிலையில், இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தை விட்டு இம்ரான்கான் வெளியேறினார்.

பாகிஸ்தானின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக அந்நாட்டு நாடாளுமன்றம் திங்கட்கிழமை கூடுகிறது. அடுத்த தேர்தல் நடைபெறவுள்ள அக்டோபர் 2023 வரை அந்த நபர் ஆட்சியில் இருக்க முடியும்.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ராகன் கான் ஆவார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...