நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு: ஏப்ரல் 14 வரை கனமழை பெய்யும்

Date:

நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள தாழ்வான கடல் பகுதியின் கொந்தளிப்பான தன்மை காரணமாக இன்று பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், தற்போதைய மழையுடனான வானிலை ஏப்ரல் 14 வரை நீடிக்கும் எனவும் இன்று பிற்பகல் நாடு முழுவதும் பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதான நீர்த்தேக்கப் பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ததன் காரணமாக பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 67 வீதத்தால் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கே.டி.என். சிறிவர்தன.

அதிக மழையுடன், நீர்மட்டம் நேற்றைய தினம் (9) 66 வீதமாக உயர்ந்துள்ளதாகவும் அதன்படி, தெதுரு ஓயா மற்றும் ராஜாங்கனை ஆகிய இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஏப்ரல் 15ஆம் திகதி முதல் மே மாதம் முதல் வார இறுதிக்குள் பயிர்ச்செய்கையை தொடங்குமாறு பணிப்பாளர் நாயகம் விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...