நுகேகொடை-மஹரகம வீதி மீண்டும் திறப்பு: விபரங்களை வெளியிட்ட பொலிஸார்!

Date:

நுகேகொடை- மஹரகம பிரதான வீதி (119) வழமையான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நுகேகொடை-மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 44 ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட ஐந்து பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், பொலிஸ் பஸ், பொலிஸ் ஜீப் வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.

மேலும், இந்த சம்பவத்தில் 05 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...