‘புதிய அமைச்சரவையில் அமைச்சுக்களை ஏற்க போவதில்லை ‘: பந்துல குணவர்த்தன

Date:

எதிர்வரும் சில நாட்களில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவைப் பதவியை ஏற்கப் போவதில்லை என முன்னாள் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண இளைஞர்கள் அடங்கிய அமைச்சரவையொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும், அவர்களுக்கு இடமளிக்கும் வகையில், அமைச்சரவையின் பொறுப்பை ஏற்கப் போவதில்லை எனவும் அமைச்சர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய காலத்திற்கு சுமார் 15 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்க முன்வந்துள்ள அமைச்சர், நெருக்கடிக்கு தீர்வு கிடைத்தவுடன் மற்றுமொரு அமைச்சரவையை நியமிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.

மேலும், குறுகிய காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பல மாற்றங்களையும்.பந்துல குணவர்தன தனது கடிதத்தில் ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...