புத்தாண்டிலும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில்!

Date:

புத்தாண்டு தினத்திலும் நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் பதிவாகியுள்ளன.

தேசிய புத்தாண்டு இன்று காலை 8.41 மணிக்கு உதயமாகிய போதிலும் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தனர்.

இன்று அதிகாலை 4 மணி முதல் கொம்பனிதெருவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் காத்திருந்தனர், ஆனால் புத்தாண்டு பிறக்கும் வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியர்கள் எரிபொருள் நிரப்ப மறுத்துள்ளனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் போதியளவு பெற்றோல் இருப்பு வைத்திருப்பதாக உறுதியளித்த போதிலும், வரிசைகள் காணப்படுகின்றன.

இதற்கிடையில், 37,500 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 37,500 மெட்ரிக் தொன் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு மேலும் இரண்டு கப்பல்கள் இன்று நாட்டிற்கு வரும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனம் தெரிவித்துள்ளது.

கப்பல்கள் வந்தவுடன் எரிபொருள் விநியோகம் விரைவில் தொடங்கும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

எலிக்காய்ச்சலை தடுக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

எலிக்காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் வடமத்திய மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாளைய...

5 ஆவது மீளாய்வு குறித்து இலங்கையுடன் IMF பணியாளர் மட்ட ஒப்பந்தம்!

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் 4 ஆண்டு நீட்டிக்கப்பட்ட...

இஸ்ரேல் – ஹமாஸ் முதற்கட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டது: பணயக் கைதிகள் விடுவிப்பிற்கு ஹமாஸ் இணக்கம்!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான முதற்கட்ட போர்...

கட்டுரை: ஹமாஸின் சாணக்கியம்: முஸ்லிம்கள் தெரிய வேண்டியது என்ன?

அஹ்மத் அல்-ரஷீத் அல்ஜஸீராவிலிருந்து.. அரசியல் என்பது சாத்தியங்களின் கலை, கனவுகளின் கலை அல்ல என்று...