போராட்டக் களமாக மாறியுள்ள காலி முகத்திடல் : 3ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

Date:

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி நாட்டிற்காக வீதியில் இறங்கியவர்கள் தற்போதைய அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றும் முயற்சியாக கொழும்பு காலி முகத்திடலில் போராட்டக் களமாக மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதற்காக நாடு முழுவதிலுமிருந்து மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

ஏப்ரல் மாதம் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மும்முரமாக தயாராகி வந்த மக்கள், இம்முறை வித்தியாசமான களத்திற்கு தமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டுள்ளார்கள்.

தற்போதைய நெருக்கடியால், இம்முறை புத்தாண்டு உணவுகளின் நறுமணத்தை சுவாசிப்பது கனவாகிவிட்டது.
நாட்டு அரசாங்கம் வெளியேறும் வரை நாமும் செல்ல மாட்டோம் என்ற நோக்கத்தில் தற்போது காலி முகத்திடல் வழமைக்கு மாறாக காட்சியளிக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர முடிவு செய்துள்ளோம்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக காலி முகத்திடலில் 3ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது.

ஜனாதிபதி பதவி விலகும் வரை வெளியேற மறுத்து காலி முகத்திடலில் கூடாரங்கள் அமைத்து பல ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியுள்ளனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...