போராட்டக்காரர்கள் மோதலால் சிலாபத்தில் பதற்றமான சூழல்!

Date:

சிலாபத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஒரு குழுவிற்கும் அரசாங்கத்திற்கு எதிரான மற்றுமொரு குழுவிற்கும் இடையில் சிலாபம் நகர பகுதியில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையிலான அரச சார்பு செயற்பாட்டாளர்கள் புத்தளம் நோக்கி பேரணியாகச் சென்ற போது, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மற்றுமொரு குழுவைச் சேர்ந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை எதிர்கொண்டு மோதலில் ஈடுபட்டதையடுத்து பதற்றமான நிலைமை உச்சக்கட்டத்தை எட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோதலில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...

இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்!

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது,...