சிங்கள பௌத்த மக்கள் கருத்தின் மீது கைவைக்க வேண்டாம் என தெரிவித்து கொழும்பில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணி கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கிற்கு அருகிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த பேரணியில் ‘மக்களின் இந்த போராட்டம் பொய்யானது, சிங்கள மக்களின் செல்வாக்கை தொடாதே போன்ற என்ற பதாதைகளை ஏந்தி பல பிக்குகளும், சமூக ஆர்வலர்கள் என கூறி சிலரும், நெலும் பொக்குன மண்டபத்தலிருந்து நடை பவணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
நடை பவணி எங்கு முடியும், எந்த திசை நோக்கி செல்லும் என்று இதுவரை தெரியப்படுத்தவில்லை.
மகா சங்கத்தினர், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த பேரணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.