‘மக்கள் கஷ்டங்களை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது’ : இராஜினாமா கடிதத்தில் ரொஷான் ரணசிங்க!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சருமான ரொஷான் ரணசிங்க, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவரது இராஜினாமா மே 01 முதல் அமலுக்கு வருகிறது.

அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் தீவிரமாகியுள்ள நிலையில், ரொஷான் ரணசிங்கவின் பதவி விலகல் குறித்த அறிவிப்பானது அரசாங்கத்திற்கும் மேலும் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை அவர் ஜனாதிபதிக்கு வழங்கி இராஜினாமா கடிதத்தில்,

நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இந்த தருணத்தில், வெறுமனே என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என நிமல் லான்சா தெரிவித்திருந்ததுடன், சிறப்புரிமை மற்றும் அதிகாரம் ஆகியவற்றை கடந்து தான் எப்போதும் மனசாட்சிக்கு கட்டுப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமது பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைக்க கூட சந்தர்ப்பம் வழங்காமை குறித்து மிகுந்த வருத்தமடைவதாகவும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...