நுகேகொடை- மிரிஹான பகுதியில் நேற்று இடம்பெற்ற கலவரம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற் இந்த மோதலின் போது ஒரு பொலிஸ் பஸ், 1 பொலிஸ் ஜீப், 2 மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன மற்றும் ஒரு தண்ணீர் பீரங்கி ட்ரக் சேதமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது 17 பொதுமக்கள், 17 பாதுகாப்பு படையினர் மற்றும் 3 ஊடகவியலாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்துள்ளனர்.
போராட்டத்தின் போது காயமடைந்த பொலிஸ், விசேட பொலிஸ் பிரிவு மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.