மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: பொலிஸ் ஊடகப்பிரிவு

Date:

நுகேகொடை- மிரிஹான பகுதியில் நேற்று இடம்பெற்ற கலவரம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற் இந்த மோதலின் போது ஒரு பொலிஸ் பஸ், 1 பொலிஸ் ஜீப், 2 மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன மற்றும் ஒரு தண்ணீர் பீரங்கி ட்ரக் சேதமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது 17 பொதுமக்கள், 17 பாதுகாப்பு படையினர் மற்றும் 3 ஊடகவியலாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்துள்ளனர்.

போராட்டத்தின் போது காயமடைந்த பொலிஸ், விசேட பொலிஸ் பிரிவு மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...