ரம்புக்கனை சம்பவம்: பாராளுமன்றம் ஆரம்பமாகி 5 நிமிடங்களில் ஒத்திவைப்பு!

Date:

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிதுமளியால் 10 நிமிடங்களுக்கு சபை நடவடிக்கைகளை சபாநாயகர் மனிந்த யாப்பா அபேவர்த்தன ஒத்திவைத்தார்.

இன்று காலை பாராளுமன்றம் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், நேற்று ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சபையின் அடிப்படை பணிகளை முன்னெடுக்க இடமளிக்குமாறு சபாநாயகர் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார். இவ்வேளையில் சபையில் அமளி துமளி ஏற்பட்ட நிலையில், சபை நடவடிக்கைகளை சபாநாயகர் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...