ரம்புக்கனை போராட்டம்: சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்: சட்டத்தரணிகள் சங்கம்

Date:

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் உயிரிழப்பு குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் போராட்டக்காரர்களின் உண்மையான குறைகளை கருத்தில் கொண்டு காவல்துறையும் ஆயுதப்படைகளும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 2022 வரை எங்களால் முன்வைக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகள் அதிகாரிகளால் கவனிக்கப்படாமல் போனது வருத்தமளிக்கிறது.

இந்நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க எமது உறுப்பினர்கள் தொடர்ந்தும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ரம்புக்கனை போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 8 பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...