‘அரசாங்கத்தை வெளியேற்றுவோம், சிஸ்டத்தை மாற்றுவோம்’ :பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ஆரம்பமானது!

Date:

நுகேகொடை விஜேராம வீதியில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்புப் பேரணி தற்போது பாராளுமன்றத்தை நோக்கிப் பயணிக்கிறது. நுகேகொட மற்றும் நாவல பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று பிற்பகல் ஆரம்பமானது.

மாணவர்கள் கறுப்பு ஆடை மற்றும் சிவப்பு நிற துணியை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக இந்த எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

‘அரசாங்கத்தை அகற்றுவோம்! சிஸ்டத்தை மாற்றுவோம்!’. ‘வீட்டிற்குச் செல்லுங்கள் கோட்டா’ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுமாறும், நாட்டில் ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பாகக் கருதப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக கொழும்பில் இளைஞர் எதிர்ப்பாளர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் இலங்கை முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...