காலி முகத்திடல் போராட்டம் தொடர்பான மனுவை விசாரணை செய்வதிலிருந்து நீதவான் விலகியுள்ளார்!

Date:

காலி முகத்திடலில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக இலங்கை பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை விசாரணை செய்வதிலிருந்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவெல விலகியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக இலங்கை பொலிஸாரால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி சவேந்திர விக்ரம நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்த கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் தயாராக இருந்தால், நீதிமன்றத்தில் சமர்பிக்க தயார் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், ஏனைய சட்டத்தரணிகளுடன் ஆஜராகியிருந்தார்.

கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல, இரு தரப்பினரும் சமர்ப்பித்த உண்மைகளை பரிசீலித்ததன் பின்னர், அவ்வாறான கோரிக்கையை பரிசீலிப்பதில் இருந்து விலக தீர்மானித்ததுடன், கோரிக்கையை வேறொரு நீதவானிடம் ஒப்படைக்குமாறும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...