கொள்ளுப்பிட்டியில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி!

Date:

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியொன்று தற்போது கொள்ளுப்பிட்டியை அண்மித்து காலி முகத்திடலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த எதிர்ப்பு பேரணியால் கொள்ளுப்பிட்டி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமு.

ஜனாதிபதி பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள ‘கோட்டாகோகமவுடன் இணைத்து மேலும் வலுப்படுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, காலிமுகத்திடலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களின் பிரதிநிதிகள் ஏற்கனவே ஏனைய போராட்ட இடங்களுக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

இன்று (மே 28) காலி முகத்திடல் போராட்டத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் அதேவேளை, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு துறைகளைச் சேர்ந்த குழுக்களால் நாள் முழுவதும் பரந்த அளவிலான போராட்டங்கள் நடத்தப்பட்டன.

நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் அரச மற்றும் அரசியல் கட்சிகளின் செல்வாக்கிலிருந்து தம்மை விடுவித்து மக்கள் சக்தியை மேலும் அதிகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

காஸாவில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால ஹமாஸ் ஆட்சி கலைப்பு: நிர்வாகப் பொறுப்பை ஏற்கிறது நிபுணர்கள் குழு!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை கடந்த 20 ஆண்டுகளாக நிர்வகித்து வந்த தன்னாட்சி...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோதலில் சிறைச்சாலைகள் இருந்த பல...

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

நீர்கொழும்பு சிறை மோதல்: விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...