சபாநாயகரின் அலுவலகத்திற்குள் புகுந்த எதிர்க்கட்சியினரால் பாராளுமன்றத்தில் பதற்றம்!

Date:

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் குழு இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள் நுழைந்தனர்.

நேற்று மாலையில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேகுணவர்தனவிடம் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், அரசாங்கத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிப்பதற்கான திகதியை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்தும் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினர்.

அதேவேளை உறுப்பினர்கள் நம்பிக்கையில்ல பிரேரணை மீது விவாதம் செய்வதற்கான திகதியை வழங்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது, ஆனால் பதவி நீக்க பிரேரணைக்கு இல்லை என்றும் கூறினர்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...