சமீபத்திய போராட்ட பூமியாக பாராளுமன்ற வளாகத்தில் ‘ஹொரு கோ கம’ உருவானது!

Date:

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் மாணவர்கள் குழு ஒன்று, பாராளுமன்றம் செல்லும் பாதையில் ‘ஹோரு கோ கமா’ என்ற போராட்ட முகாமை அமைத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்திற்கும் எதிராக அமைக்கப்பட்ட சமீபத்திய எதிர்ப்பு முகாம் ஆகும்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர்கள் நேற்று மாலை ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து பாராளுமன்ற வீதி வரை ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்ததுடன், மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றம் செல்லும் பாதையில் முகாமிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக ‘கோட்டா கோ கம’ மற்றும் ‘மைனா கோ கம’ உருவாகியுள்ள நிலையில், தற்போது பாராளுமன்ற வளாகத்தில் ‘ஹொரு கோ கம’ உருவாகியுள்ளது.

நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ள நிலையில்இ அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியில் கோட்டா கோ கம என்ற மாதிரி கிராமமும் உருவாக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....