நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கான திகதியை நாளை சபாநாயகர் அறிவிப்பார்!

Date:

நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதியை தீர்மானிக்கும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (9) முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சிங்கள ஊடகமொன்று கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது, இது தொடர்பில் நாளை விரிவாக கலந்துரையாடப்படும், எனவும் நாட்டின் பிரச்சினை மற்றும் பாராளுமன்றத்திற்கு அருகில் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அத்தோடு நாளை நடைபெறும் கூட்டத்தின் பின்னர் சபாநாயகர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்த உள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது, ஹரீன் பெர்னாண்டோ மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் சார்ஜன்டை தாக்கி செங்கோலை பறிக்க முயற்சித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையையும், ஜனாதிபதிக்கு எதிரான மற்றுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் பிரதமர் அண்மையில் சபாநாயகரிடம் கையளித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...