நெருக்கடிக்கு அமைதியான தீர்வைக் காண வேண்டும்:சட்டத்தரணிகள் சங்கம்!

Date:

காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடிக்கு வன்முறை மூலம் தீர்வு காணப்படாமல் அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

இந்த முக்கியமான தருணத்தில் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக தமது சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்துள்ள பிரேரணை ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிலைமைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் அரசியல் நிலைப்பாட்டை உருவாக்குவதற்கு மக்கள் இந்த தருணத்தில் அமைதியான முறையில் செயற்பட வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...

இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்!

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது,...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான  வானிலை நிலவக்கூடும்.என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய...

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...