பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்க முடியுமா? எரிசக்தி அமைச்சர் பதில்

Date:

நாரஹேன்பிட்டி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வெளியான செய்திகள் பொய்யானவை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது எவருக்கும் நடைமுறையில் உள்ள சந்தை விலையை விட குறைவான எரிபொருளும் வழங்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிரப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் பம்பின் விலைகள் புதுப்பிக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் அறிக்கையொன்றை அறிவிக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களை சங்கடப்படுத்தும் நோக்கில் சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் இவ்வாறான செய்திகளை வெளியிடுவதாக தெரிவித்த மின்சக்தி அமைச்சர் இது தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...