‘பாராளுமன்ற எம்.பி.க்கள் அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்’

Date:

நாடாளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்தி வைத்ததையடுத்து இன்று பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்குவதற்காக பாராளுமன்ற வீதியின் இருபுறங்களிலும் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் துடைப்பம் தாங்கி தமது வீடுகளில் காத்துக் கொண்டிருந்தனர்.

மேலும், ஆண்களும் பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து நடைபாதையின் இருபுறமும் திரண்டனர்.

எம்.பி.க்கள் யாராவது இருக்கிறார்களா என்று சாலையில் சாதாரண வாகனங்களை எட்டிப்பார்த்ததையும் கவனிக்கக் கூடியதாக இருந்தது.

பாராளுமன்றம் நிறைவடைந்ததையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டதாக சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்துக்கான கூடுதல் நுழைவாயில்களைப் பயன்படுத்தி எம்.பி.க்கள் வெளியே அனுப்பப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...

இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்!

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது,...