‘பாராளுமன்ற எம்.பி.க்கள் அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்’

Date:

நாடாளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்தி வைத்ததையடுத்து இன்று பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்குவதற்காக பாராளுமன்ற வீதியின் இருபுறங்களிலும் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் துடைப்பம் தாங்கி தமது வீடுகளில் காத்துக் கொண்டிருந்தனர்.

மேலும், ஆண்களும் பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து நடைபாதையின் இருபுறமும் திரண்டனர்.

எம்.பி.க்கள் யாராவது இருக்கிறார்களா என்று சாலையில் சாதாரண வாகனங்களை எட்டிப்பார்த்ததையும் கவனிக்கக் கூடியதாக இருந்தது.

பாராளுமன்றம் நிறைவடைந்ததையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டதாக சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்துக்கான கூடுதல் நுழைவாயில்களைப் பயன்படுத்தி எம்.பி.க்கள் வெளியே அனுப்பப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...