‘மைனா கோ கம’ போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் குறித்து சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு!

Date:

கொழும்பில் நேற்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க ஆதரவாளர்களால், அலரிமாளிகைக்கு அருகாமையிலும், கொழும்பு காலிமுகத்திடலிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதற்கிடையில், ராஜபக்ஷ ஆதரவாளர்கள் காலி முகத்திடலில் உள்ள போராட்டத் தளத்தை முற்றுகையிட்டபோது இலங்கை பொலிஸாரின் செயலற்ற தன்மை குறித்து பல வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன.

அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய பொதுஜன பெரமுனவின் தலைவர்களில் ஒருவரான அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுடன் காலி முகத்திடலில் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...