‘மைனா கோ கம’ போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் குறித்து சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு!

Date:

கொழும்பில் நேற்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க ஆதரவாளர்களால், அலரிமாளிகைக்கு அருகாமையிலும், கொழும்பு காலிமுகத்திடலிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதற்கிடையில், ராஜபக்ஷ ஆதரவாளர்கள் காலி முகத்திடலில் உள்ள போராட்டத் தளத்தை முற்றுகையிட்டபோது இலங்கை பொலிஸாரின் செயலற்ற தன்மை குறித்து பல வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன.

அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய பொதுஜன பெரமுனவின் தலைவர்களில் ஒருவரான அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுடன் காலி முகத்திடலில் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...

Diamond Excellence Award: அட்டாளைச்சேனை Hakeem Art Work க்கு “கலை. சமூக தாக்கம்” விருது

அட்டாளைச்சேனை-13 இல் செயல்பட்டு வரும் Hakeem Art Work Shop நிறுவனம்,...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...