காலி முகத்திடல் போராட்டம் தொடர்பான மனுவை விசாரணை செய்வதிலிருந்து நீதவான் விலகியுள்ளார்!

Date:

காலி முகத்திடலில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக இலங்கை பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை விசாரணை செய்வதிலிருந்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவெல விலகியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக இலங்கை பொலிஸாரால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி சவேந்திர விக்ரம நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்த கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் தயாராக இருந்தால், நீதிமன்றத்தில் சமர்பிக்க தயார் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், ஏனைய சட்டத்தரணிகளுடன் ஆஜராகியிருந்தார்.

கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல, இரு தரப்பினரும் சமர்ப்பித்த உண்மைகளை பரிசீலித்ததன் பின்னர், அவ்வாறான கோரிக்கையை பரிசீலிப்பதில் இருந்து விலக தீர்மானித்ததுடன், கோரிக்கையை வேறொரு நீதவானிடம் ஒப்படைக்குமாறும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...