ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ போன்ற அரசியல்வாதிகளுக்கு சட்ட நடவடிக்கை: ‘கோட்டா கோ கம’வில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு!

Date:

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

அமைதியான போராட்டங்கள் மீதான நேற்றைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்பிலான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கோட்டா கோ கம போராட்ட தளத்தில் விசேட செய்தியாளர் மாநாடு இடம்பெற்று வருகின்றது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள்,

நேற்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்ட இடத்தில் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

சட்டத்தை அமுல்படுத்தாத சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஏனைய பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என சட்டத்தரணி சரித் கல்ஹேன தெரிவித்துள்ளார்.

31 நாட்களாக அமைதியாக இருந்த கோட்டா கோ கம மற்றும் மைனா கம போர்க்களம் மீது நேற்று பொதுஜன பெரமுனவின் ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர்கள் நடத்திய தாக்குதலால் நாடே கொந்தளிப்பில் உள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலக வேண்டாம் எனக் கூறி அவருக்கு ஆதரவாக அலரிமாளிகைக்கு வந்த மொட்டு அரசியல்வாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் தூண்டியது யார்?

இவ்வாறானவர்களை தூண்டிவிட முனைப்பு காட்டியவர்களில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் ஒருவர்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ போன்ற அரசியல்வாதிகளை மீண்டும் அரசியல் நீரோட்டத்திற்கு கொண்டு வராமல் இருப்பது அனைவரின் பொறுப்பாகும்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும், இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தூண்டிய அரசியல்வாதிகளுக்கும் மேலே உள்ள அரசியல் அதிகாரிகளுக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டாமா?

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஒரு நாட்டைக் கொளுத்தியதற்காக எப்போது கைது செய்யப்படுவார்?

Popular

More like this
Related

வரலாற்றைத் தேடும் வாசகர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில்..!

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் லிபியாவை சேர்ந்த கலாநிதி அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி...

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்...

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...