டெங்கு காய்ச்சலால் 5 வயது சிறுமி உயிரிழப்பு!

Date:

டெங்கு காய்ச்சல் காரணமாக உடுவிலைச் சேர்ந்த பரசுதன் யோயிதா என்ற  5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமிக்கு கடந்த 23ஆம் திகதி மாலை காய்ச்சல் இருந்துள்ளது. பின்னர் பனடோல் மாத்திரை வழங்கப்பட்டதனால் ஒரளவு சுகம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கடுமையான காய்ச்சல் காரணமாக இணுவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகள் வழங்கப்பட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அன்றைய தினம் இரவு சிறுமிக்கு காய்ச்சலும் வாந்தியும் அதிகரித்ததால் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலையைக் கருத்திற்கோண்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறுமி சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுமி உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் இரு சிறுவர்கள் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர். கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் டெங்கு காய்ச்சலினால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

காய்ச்சல் ஏற்பட்டால் நேரடியாக அருகில் உள்ள அரச மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தவறான மருந்தால் பார்வை இழந்தவர்களுக்கு இழப்பீடு: அமைச்சரவை அனுமதி

கண் சத்திர சிகிச்சைக்குப் பிறகு Prednisolone Acetate மருந்து வழங்கப்பட்டதால் பார்வை...

நிந்தவூரில் நடைபெற்ற மஸ்ஜிதுகள் ஊடாக சமூகத்தை வலுவூட்டல் செயலமர்வு: MEEDS திட்டமும் அறிமுகம்!

நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளை முறையான வழிகாட்டல்களின்...

எல் நினோவை சமாளிக்க அமைச்சரவை உப குழு நியமனம்

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ நிலைமைக்கு முகம்கொடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைள்...

டெங்கு பரவல் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

 மொறட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின்...