தவறான மருந்தால் பார்வை இழந்தவர்களுக்கு இழப்பீடு: அமைச்சரவை அனுமதி

Date:

கண் சத்திர சிகிச்சைக்குப் பிறகு Prednisolone Acetate மருந்து வழங்கப்பட்டதால் பார்வை இழந்த நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய நோயாளி ஒருவருக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் இழப்பீடு வழங்க இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டில் குறித்த மருந்தை பயன்படுத்தியதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்கண் சத்திர சிகிச்சை செய்து கொண்ட சில நோயாளிகளின் பார்வை இழக்கப்பட்ட அல்லது மேலும் பலவீனமடைந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்கண் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பார்வை இழந்த 17 நோயாளிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தை பயன்படுத்தியதால் கண் பாதிப்புக்குள்ளான நோயாளிகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவினால், பார்வை இழந்த மேலும் 4 நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த நான்கு நோயாளிகளுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பேஸ்புக்கில் AI மூலம் இயங்கும் போலி பெண் கணக்குகள்!

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட...

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை எட்டியது!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 63,835 டெங்கு நோய்த் தொற்றாளர்கள் அடையாளம்...

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்: பிரதமர்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகப் பாவனையைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டம்...

அமெரிக்க – ஈரான் சமாதான ஒப்பந்தம் : யுத்த வெறியர்களான அமெரிக்கா – இஸ்ரேல் இடையே பிளவு

-லத்தீப் பாரூக் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம், ஈரானுக்கு 300...