தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!

Date:

இலங்கை தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தமது கோரிக்கைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றும் நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

அதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, 90 வீதமான கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், எரிபொருள் நிரப்பும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் சாந்த சில்வா தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...