பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி நீக்கம் செய்யப்படுவார் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு தெரிந்த பின்னரே ஜீவன் தொண்டமான் ராஜபக்ச அரசில் இருந்து பிரிந்தார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோதும் அடக்கப்பட்ட போதும் அமைச்சர் பதவிகளை அனுபவிப்பதில் இ.தொ.கா. அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது என்றார்.
‘இந்தக் கட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ பலமாக இருந்திருந்தால் ஜீவன் தொண்டமான் இவ்வாறானதொரு முடிவை எடுத்திருப்பாரா என்பது எனக்கு சந்தேகம்.
சிலர் அரசியல் அதிகாரம் மற்றும் சலுகைகளுக்குப் பின்னால் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்’ என்றும் சுமந்திரன் கூறினார்.