தேசபந்து தென்னக்கோன் பயணித்த வாகனம் மீது கல்லெறி தாக்குதல்!

Date:

பெரஹெர மாவத்தையில் வைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது கல் வீசப்பட்டதில் அவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடனடியாக இராணுவத்தினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பொலிஸ் மா அதிபரை மீட்டு பொலிஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கொழும்பு – அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து உடைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன் வாகனத்தின் மீதும் தீ வைக்க முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை, மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு ‘நியூஸ் நவ்’ தளத்திற்கு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...