தேசபந்து தென்னக்கோன் பயணித்த வாகனம் மீது கல்லெறி தாக்குதல்!

Date:

பெரஹெர மாவத்தையில் வைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது கல் வீசப்பட்டதில் அவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடனடியாக இராணுவத்தினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பொலிஸ் மா அதிபரை மீட்டு பொலிஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கொழும்பு – அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து உடைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன் வாகனத்தின் மீதும் தீ வைக்க முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை, மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு ‘நியூஸ் நவ்’ தளத்திற்கு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...

Diamond Excellence Award: அட்டாளைச்சேனை Hakeem Art Work க்கு “கலை. சமூக தாக்கம்” விருது

அட்டாளைச்சேனை-13 இல் செயல்பட்டு வரும் Hakeem Art Work Shop நிறுவனம்,...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...