‘நந்தேட ஜங்கியக்’: பாராளுமன்றம் அருகே உள்ளாடை போராட்டம்!

Date:

இலங்கை பாராளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் தடுப்பு தடுப்புகளில் பல ஆண் மற்றும் பெண் உள்ளாடைகள் காட்சிப்படுத்தப்பட்டு தனித்துவமான போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளாடைகளில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

தேசிய நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளாடைகள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘கோட்டகோகம மற்றும் ஹொரா கோ காம’ எதிர்ப்பு பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘நந்தேட ஜங்கியக்’ என்ற தொனிப்பொருளின் கீழ் உள்ளாடைகளை பொலிஸ் தடுப்புகளில் தொங்கவிட்டு சர்வதேச உள்ளாடைகள் இல்லாத தினம் 2022 ஐ கொண்டாடினர்.

‘நந்தேட ஜங்கியக்’ எனும் தொனிப்பொருள் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவைக் குறிப்பிடுவதாகும்.

அதேவேளை “இதுதான் எமக்கு மிச்சம்” எனக் கூறி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்ற நுழைவாயில் ‘ஹொரா கோ காம’ அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு மற்றும் சிலர் உள்ளாடைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதைக் காண முடிந்தது.

உள்ளாடைகளைக் கூட ஆடம்பரப் பொருளாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பறித்த ஆட்சியாளருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...