‘நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனுமதிக்காவிட்டால் சபாநாயகர் வீட்டை முற்றுகையிடுவோம்’

Date:

நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் ஒத்திவைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கம் அவ்வாறு செய்யாது நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதியை முன்கூட்டியே வழங்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் சபாநாயகர் இல்லத்தையும் முற்றுகையிடுவோம் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தையடுத்து ‘என் உடல் நடுங்குவதை நீங்கள் உணர்ந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருப்பதாக சிரிப்புடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...