‘ மகிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற மாட்டார்’ :நாமல்

Date:

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்னும் நாட்டை விட்டு செல்வில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மகிந்த தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக மாட்டார் எனவும், தனக்குப் பின்வருபவரை தெரிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாகவும் நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரை வெளியே வருமாறு கோரி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ள வேளையிலேயே நாமல் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் திருகோணமலை ஊடாக நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சமூக ஊடக அறிக்கைகள் வெளியானதையடுத்து போராட்டக்காரர்கள் கடற்படை தளத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...

Diamond Excellence Award: அட்டாளைச்சேனை Hakeem Art Work க்கு “கலை. சமூக தாக்கம்” விருது

அட்டாளைச்சேனை-13 இல் செயல்பட்டு வரும் Hakeem Art Work Shop நிறுவனம்,...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...