மஹிந்தவின் பாதுகாப்பு பிரதானிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வர அழைப்பு!

Date:

கொட்டா கோ கிராமம் மற்றும் மைனா கோ கிராமத்தில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் இன்று (11) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 9ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிரதம அமைப்பாளர் ஆகியோர் வாக்குமூலங்களைப் பதிவுசெய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக அரசாங்க பகுப்பாய்வாளரையும் இன்றைய தினம் கொட்டா கோ கிராம வளாகத்திற்கு அழைக்கவுள்ளதாகவும், இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

போராட்ட இடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ஆறு புலனாய்வுக் குழுக்கள் அதற்கு நியமிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்..!

பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக 60 நாள் போர் நிறுத்த பரிந்துரை முன்மொழியப்பட்டது. இந்த...

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...