ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
ஹர்த்தால் போராட்டத்தில் பங்கேற்கும் அரச ஊழியர்களின் மே 2022 சம்பளம் குறைக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் கடித முறைமையினை பயன்படுத்தி பேஸ்புக்கில் பரப்பப்படும் அறிவிப்பு முற்றிலும் தவறானது என்று குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி செயலகம் அவ்வாறானதொரு அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சுக்கு வழங்கவில்லை எனவும், இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தி தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.