ஹர்த்தாலில் இணையும் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும்?: ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு!

Date:

ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

ஹர்த்தால் போராட்டத்தில் பங்கேற்கும் அரச ஊழியர்களின் மே 2022 சம்பளம் குறைக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் கடித முறைமையினை பயன்படுத்தி பேஸ்புக்கில் பரப்பப்படும் அறிவிப்பு முற்றிலும் தவறானது என்று குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி செயலகம் அவ்வாறானதொரு அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சுக்கு வழங்கவில்லை எனவும், இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தி தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...