‘அரசாங்கத்தை வெளியேற்றுவோம், சிஸ்டத்தை மாற்றுவோம்’ :பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ஆரம்பமானது!

Date:

நுகேகொடை விஜேராம வீதியில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்புப் பேரணி தற்போது பாராளுமன்றத்தை நோக்கிப் பயணிக்கிறது. நுகேகொட மற்றும் நாவல பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று பிற்பகல் ஆரம்பமானது.

மாணவர்கள் கறுப்பு ஆடை மற்றும் சிவப்பு நிற துணியை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக இந்த எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

‘அரசாங்கத்தை அகற்றுவோம்! சிஸ்டத்தை மாற்றுவோம்!’. ‘வீட்டிற்குச் செல்லுங்கள் கோட்டா’ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுமாறும், நாட்டில் ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பாகக் கருதப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக கொழும்பில் இளைஞர் எதிர்ப்பாளர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் இலங்கை முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...